IST (GMT+5.5)

     

    எருசலேம் தேவாலய பணிமுட்டுகள் மற்றும் ஆசாரியர்களின் உடைகள் தயார்

    (Utensils and Attire of High Priest are ready for Holy Temple at Jerusalem)


    இந்த வீடியோவில் நீங்கள் கட்டப்பட இருக்கிற எருசலேம் தேவாலத்தின் பணிமுட்டுகள் (Vessels / Utensils), பிரதான ஆசாரியனின் உடைகள் ஆகியவற்றை காணலாம். இவை அனைத்தும் வேதத்தில் தேவனாகிய கர்த்தர் கட்டளையிட்டபடி (யாத்திராகமம் 25:40, யாத்திராகமம் 25-31:11 வரையுள்ள அதிகாரங்களை படித்துப் பாருங்கள்), மிக கவனமாக மிக அதிக பொருட்செலவில் செய்யப்பட்டு ஆயத்தமாயிருக்கின்றன. அவைகளில் சில:

    • பிரதான ஆசாரியனின் உடை, மற்றும் மார்பதக்கம் - The Holy garments and the Breast Plate(யாத்திராகமம் 28:2-29)
    • பிரதான ஆசாரியனின் கிரீடம்- Holy Crown(யாத்திராகமம் 29:6)
    • ஏழு அகல்கள் கொண்ட பசும்பொன் குத்துவிளக்கு - The Golden Candle Stick (யாத்திராகமம் 31:15-37)
    • தூபகலசங்கள் - Alter Golden Incense Censers(யாத்திராகமம் 25:39)
    • சமூகதப்ப மேஜை -Table of Showbread (யாத்திராகமம் 25:3)
    • பசும்பொன் பட்டம் -The Plate of Mitre (யாத்திராகமம் 28:36)
    • தூபபீடம் - Alter of incense (யாத்திராகமம் 30:1)
    • ...இன்னும் பல.

    இவை மாதிரிகள் அல்ல (These are not replicas / models, but the one ready to be used at Holy Temple), தேவாலய உபயோகத்திற்கென செய்யப்பட்டு ஆயத்தமாயிருப்பவை.

    (யாத்திராகமம் 25:40) மலையிலே உனக்குக் காண்பிக்கப்பட்ட மாதிரியின்படியே அவைகளைச் செய்ய எச்சரிக்கையாயிரு.

    (யாத்திராகமம் 31:7-11) ஆசரிப்புக் கூடாரத்தையும் சாட்சிப்பெட்டியையும் அதின்மேலுள்ள கிருபாசனத்தையும், கூடாரத்திலுள்ள சகல பணிமுட்டுகளையும்,

    மேஜையையும் அதின் பணிமுட்டுகளையும், சுத்தமான குத்துவிளக்கையும் அதின் சகல கருவிகளையும், தூபபீடத்தையும்,

    தகனபலிபீடத்தையும் அதின் சகல பணிமுட்டுகளையும், தொட்டியையும் அதின் பாதத்தையும்,

    ஆராதனை வஸ்திரங்களையும், ஆசாரிய ஊழியம் செய்வதற்கான ஆசாரியனாகிய ஆரோனின் பரிசுத்த வஸ்திரங்களையும், அவன் குமாரரின் வஸ்திரங்களையும்,

    அபிஷேக தைலத்தையும், பரிசுத்த ஸ்தலத்துக்குச் சுகந்தவர்க்கங்களாகிய தூபவர்க்கத்தையும், நான் உனக்குக் கட்டளையிட்டபடியே, அவர்கள் செய்யவேண்டும் என்றார்.

    (1 தெசலோனிக்கேயர் 5:23) சமாதானத்தின் தேவன் தாமே உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்குவாராக. உங்கள் ஆவி ஆத்துமா சரீரம் முழுவதும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்போது குற்றமற்றதாயிருக்கும்படி காக்கப்படுவதாக.

    கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வருகை மிக சமீபித்திருக்கிறது.

    ஆயத்தமாயிருப்போம், மற்றவர்களையும் ஆயத்தப்படுத்துவோம்.

    Print Email