_____________________________________________________________________________________________________________________________________________

வேர் கனி கொடுக்கும்Sharon Rose Ministries

தேவ செய்தி - டிசம்பர் 2016 (Message - Dec 2016)

தேவ செய்தி: சகோ.J.இம்மானுவேல் ஜீவகுமார்

_____________________________________________________________________________________________________________________________________________

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

... நீதிமானுடைய வேர் கனி கொடுக்கும். (நீதிமொழிகள் 12:12)

சர்வ வல்லமையுள்ள தேவனுக்கு எதிரான, அவருடைய பரிசுத்த வேதம் போதிக்கும் அவருடைய வழிகளுக்கு எதிரான ஒரு நிலையிலிருந்து - அதாவது தேவனாகிய கர்த்தரை, ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை அறியாத நிலையிலிருந்து, மனம் போன போக்கில் தன் இஷ்டப்படி வாழ்ந்து பாவம் செய்து வாழ்கிற நிலையிலிருந்து நீதிமான் என்ற நிலைக்கு வருவதெப்படி? நீதிமானாக  ஆவது எப்படி? பரிசுத்த வேதம் இதை நமக்கு விளக்கிச் சொல்கிற சில வசனங்களை கீழே காண்போம்:

கல்வாரி சிலுவையில் ஆண்டவர் இயேசு கிறிஸ்து "என் பாவ, சாப, நோய்கள் எல்லாவற்றையும் தன் மீது ஏற்றுக்கொண்டு தன் பரிசுத்த இரத்தத்தை சிலுவையில் சிந்தி என் பாவத்தின் தண்டனைக்கு தன்னை பலியாக்கி, என் பாவ, சாப, நோய்கள் எல்லாவற்றிற்கும் பரிகாரம் செய்து, என் மீதிருந்த பிசாசின் கிரியைகளை அழித்து ஜெயங்கொண்டு என்னை மீட்டார்" என்று முழு மனதோடு நம்பி விசுவாசித்து - ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை தன் சொந்த இரட்சகராக, மீட்பராக, தெய்வமாக ஏற்றுக்கொள்ளும் போது தேவ கிருபையினால் விசுவாசத்தைக் கொண்டு நாம் இயேசு கிறிஸ்துவுக்குள் நீதிமான்களாக்கப்படுகிறோம். ஆண்டவர் இயேசு கிறிஸ்து நமக்காக எல்லா நீதியையும், நியாயப் பிரமாணத்தையும் நிறைவேற்றி முடித்து, அவரே நம்முடைய நீதியாயிருக்கிறார்.  இதையே மேற்கண்ட  பரிசுத்த வேத வசனங்கள் போதிக்கின்றன. இங்கே ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை,  அவர் நமக்காய் சிலுவையில் செய்து முடித்தவைகளை நம்பி விசுவாசித்து ஏற்றுகொள்வதை தவிர நாம் வேறு எதையும் செய்யவில்லை. நாம் இதற்கு எந்த விலையும் கொடுக்கத் தேவையில்லை. தேவ கிருபையால், ஆண்டவர் இயேசுவின் இரத்தத்தால் எல்லாம் இலவசமாய், மிக எளிமையான வழியில் நமக்கு அருளப்பட்டிருக்கிறது. இப்படியாகவே நாம் இருக்கும் எந்த நிலையிலிருந்தும் இயேசு கிறிஸ்துவுக்குள் நீதிமான்களாக்கப்படுகிறோம். அவரே நம்முடைய நீதியாயிருக்கிறார்.

இந்நிலையில், ஆண்டவர் இயேசு கிறிஸ்து சொல்லியிருக்கிறார்:

அப்படியானால், நீதிமான்களாக்கப்பட்ட நாம் கடைசிவரை அந்தக் கிருபையை தக்கவைத்து காத்துக்கொள்வது எப்படி? பரிசுத்த வேதத்தில் கர்த்தரே இதற்கு பதில் அளித்திருக்கிறார்:

ஆகவே, நம் ஆயுளின் முடிவு வரை அல்லது கர்த்தராகிய  இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகை மட்டும், பரிசுத்த வேதத்தின் படி நடந்து, ஆண்டவர் இயேசுவின் போதனைகளைக் கைகொண்டு அவருக்கு முன்பாக உண்மையாய் நடந்து கொள்ளும் போது, கர்த்தரே நம்மை நீதிமான் என்று அழைத்து நம்மை பரலோகம் கொண்டு சேர்ப்பார், அங்கே நமக்கு பலன் அளிப்பார்.

இப்படியாக நாம் இந்த பூமியில் நீதிமான்களாக வாழும் போது நாம் கனி கொடுக்கிறவர்களாக இருப்போம் என்று பரிசுத்த வேதம் சொல்கிறது:

அது என்ன கனி? அது ஆவியின் கனிகள், அவைகள் :

ஒரு மரம் அதன் கனியைத் தருவது என்பது சரி, நாம் எப்படி கனி கொடுக்க முடியும்? கனி கொடுப்பது என்றால் என்ன?அதற்கும் பரிசுத்த வேதம் பதில் தருகிறது.

அந்தக் கனிகள் பரிசுத்த ஆவியானவரால் நமக்கு அருளப்பட்டு, அவைகள் நமக்குள்ளிருந்து நல்ல குணமாக, நீதியாக, உண்மையாக வெளிப்படும். இதையே பரிசுத்த வேதம்  கனி கொடுப்பது என்றழைக்கிறது.

இப்படியாக, நாம் நீதிமான்களாக இந்த உலகத்தில் வாழும்போது, இந்த உலகத்திலேயும் தேவன் நமக்கு அருளும் ஆசீர்வாதங்கள், பலன்களில் சிலவற்றை கீழ்க்கண்ட பரிசுத்த வேத வசனங்களின் மூலமாக நாம் அறிந்து கொள்ளலாம்.

ஒருவேளை, மேற்கண்டபடி தேவ கிருபையினால் நாம் நீதிமான்களாக்கப்பட்டு ஆனால் சில காலங்களுக்கு பிறகு மீண்டும் துணிந்து பாவம் செய்து வழி தப்பி, பின் வாங்கிப்போவோமானால் நம் முடிவைக் குறித்து  தேவனாகிய கர்த்தர் பரிசுத்த வேத வசனங்களின் மூலமாக எச்சரித்து சொல்கிறார்:

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினால், அவருக்குள் முடிவு வரை நீதிமான்களாய் வாழ அவரே நமக்கு கிருபை செய்வாராக. ஆமென்.

 

 

Print

Joomla SEF URLs by Artio